Saturday, June 20, 2009

த‌ய‌வு செய்து மூட‌ வேண்டும், வாயை!

த‌மிழ‌ர‌ங்க‌த்தில், பி. இராயாக‌ர‌னின் க‌ட்டுரைக‌ளை ப‌டித்த‌ போது, ஆம்புரோஸ் பியெர்ஷின் "God knows the future, but a historian can alter the past‌ " என்ற‌ வாச‌க‌ம் தான் நினைவுக்கு வ‌ருகிற‌து. வ‌ர‌லாற்றை திரித்து, இன்று அவ‌ர் எழுதியுள்ள க‌ட்டுரை அப‌த்த‌ங்க‌ளின் உச்ச‌ம். அக்க‌ட்டுரையின் நோக்க‌ம், விடுத‌லைபுலிக‌ள் த‌மிழ‌ருக்கும் சிங்க‌ள‌ருக்கும் எதிரான‌வ‌ர்க‌ள் என்று நிருவுவ‌து. அத‌ற்கு, ஒரு சில‌ வ‌லுவில்லா ஆதார‌ங்க‌ளையும், த‌ன்னுடைய‌ க‌ணிணியையும் ப‌ய‌ன்ப‌டுத்தி இருக்கிறார்! விடுத‌லைபுலிக‌ளின் ஆயுத‌ போர‌ட்ட‌த்தை, ஈழ‌ விடுத‌லையின் தொட‌க்க‌மாக‌ ப‌ல‌ வ‌ட‌ இந்திய‌ ஊட‌க‌ங்க‌‌ள் நிருவி இருக்கின்ற‌ன‌. அதே வேளையை, த‌மிழில் பி. இராயாக‌ர‌ன் செய்ய‌ முய‌ன்றிருக்கிறார். புலிக‌ள், பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்காக‌வும் போராடி இருக்க‌வேண்டும் என்று, ஐரோப்பாவில் முட்டைக்கு முக‌ச்சவ‌ர‌ம் செய்து கொண்டு இருக்கும் இராயாக‌ர‌ன் அள்ளி விட்டிருக்கிறார். த‌ன்னை ஒரு போராளியாக‌ காட்டிகொள்ளும் இந்த‌ இராயாக‌ர‌ன், சிங்க‌ள‌ அர‌சினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்காக‌ என்ன‌ செய்தார்? இவ‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்ன‌ செய்தார் என்ப‌தை யாரேனும் சொல்லுங்க‌ளேன்! புலிக‌ளுக்கு, த‌மிழ‌ரும், சிங்க‌ள‌ரும் ஆத‌ர‌வ‌ளிக்க‌வில்லை என‌ பினாத்துகிற‌ இவ‌ருக்கு எவ‌ரும் ஆத‌ர‌வ‌ளிப்பது போல் தெரிய‌வில்லை. சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்னால், "வாய்ப்பு கிடைக்குமானால் ஈழ‌ம் சென்று போராட‌த் த‌யார்" என்றார் இராயாக‌ர‌ன். இந்திய‌ சுத‌ந்திர‌த்திற்கு போராட‌ ம‌காத்மா காந்திக்கோ, க‌ருப்பின‌ விடுத‌லைக்கு போராட‌ ம‌ண்டேலாவிற்கோ, ப‌ர்மிய‌ ம‌க்க‌ளின் உரிமைக்கு போராட‌ ஆங்‍‍-சான் சுகிக்கோ, திபெத்திய‌ ம‌க்க‌ளின் ந‌ல‌ன் பேன‌ த‌லாய் லாமாவிற்கோ, ஈழ‌ ம‌க்க‌ளின் பிற‌ப்புரிமைக்கு போராட‌ த‌ந்தை செல்வாவிற்கோ வாய்ப்புக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை, அவ‌ர்க‌ளே உருவாக்கி கொண்ட‌ன‌ர். வ‌ராலாறு இப்ப‌டி இருக்க‌, க‌தாநாயாக‌னாக‌ ந‌டிக்க‌ வாய்ப்பு கிடைத்தால் ந‌டிப்பேன் எனும் ந‌கைச்சுவை ந‌டிக‌ர் போல், வாய்ப்பு கிடைத்தால் போராடுவேன் என்று அரற்றும்,‌ போராளி இராயாக‌ர‌ன், த‌ய‌வு செய்து மூட‌ வேண்டும், வாயை! க‌டைசியாக‌ ஒன்று, தொப்பி போட்ட‌வ‌னெல்லாம் கேப்ட‌ன் அல்ல என்றார் திருமாவ‌ள‌வ‌ன், அது போல் பாசிச‌ம், போராட்ட‌ம் என்று எழுதுவ‌தால் நீங்க‌ள் போராளி அல்ல‌!

2 comments:

Anonymous said...

unmai..... vaayai mooda vendum...

kicha said...

//unmai..... vaayai mooda vendum...//

ந‌ன்றி அனானி அவ‌ர்க‌ளே! ஆக்க‌ப்பூர்வ‌மான‌ க‌ருத்துக்க‌ளை முன் வைத்து ஈழ‌ம‌க்க‌ளின் விடிவிற்க்கு வ‌ழி சொல்வ‌தை விடுத்து, அழிவை ப‌ற்றியே எழுதி, க‌டுப்புக்க‌ளை கிள‌ப்பும் இரயாக‌ர‌னை க‌ண்டிக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌மாகிய‌து!